Tuesday, July 2, 2024
Home » ஊட்டியில் ‘பிளம்ஸ்’ விளைச்சல் குறைந்தது:1 கிலோ ரூ.250க்கு விற்பனை

ஊட்டியில் ‘பிளம்ஸ்’ விளைச்சல் குறைந்தது:1 கிலோ ரூ.250க்கு விற்பனை

by kannappan

ஊட்டி:ஊட்டியில் பிளம்ஸ் பழம் விளைச்சல் குறைந்ததால் கிலோ ரூ.50க்கு விற்ற பழங்கள் தற்போது ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டி ஆப்பிள் என அழைக்கப்படும் பிளம்ஸ் பழங்கள் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை விளையும். இந்த பழங்கள் அதிகளவு விற்பனைக்கு வந்தால், கிலோ ஒன்று ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகும்.இம்முறை பிளம்ஸ் பழங்கள் மகசூல் மிகவும் குறைந்துள்ளது. மேலும் மார்ச் மாதம் முதல் விளைய வேண்டிய இந்த பழங்கள் தற்போதே சில இடங்களில் விளைந்துள்ளன. மார்க்கெட்டிற்கு குறைந்தளவே பிளம்ஸ் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், இதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, ஊட்டி மார்க்கெட்டில் கிலோ ரூ.240 முதல் ரூ.260 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக உள்ளதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த பழங்களை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். மகசூல் அதிகரித்தாலே பிளம்ஸ் பழங்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்….

You may also like

Leave a Comment

1 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi