ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ஊடக நிறுவனங்கள் அதிமுக புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், கட்சி தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலும் விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது உள்ளபடியே மனதிற்கு வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. இந்த காரணங்களால் ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கட்சியை சேர்ந்தவர்களோ இனி பங்கேற்கமாட்டார்கள். எங்களை பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். அதிமுகவில் இருந்து யாரையும் தங்கள் ஊடக வழியாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது