உ.பி.யில் பெரும் சோகம்!: திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த 13 பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து பலி.. கதறும் குடும்பத்தினர்..!!

உ.பி. மாநிலம் குஷி நகர் அருகே உள்ள நவுரங்கியா தோலா கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது, அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அங்கிருந்த கிணற்றின் மீது ஏறி நின்று நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அந்த கிணறானது இரும்பு கம்பிகளைக்கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆனால், ஏராளமானோர் அந்த கிணற்றின் மீது ஏறியதால், பாரம் தாக்காமல் கம்பி உடைந்து, கிணற்றுக்குள் விழுந்தது. இந்த சோக சம்பவத்தில் 13 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்து சிறுமிகளும் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!

எளிய மக்களுடன் ராகுல் காந்தி..!!

இங்கிலாந்தில் 27 ஆண்டுகளுக்கு பின்னும் கரையொதுங்கும் 50 லட்சம் லெகோ பொம்மைகள்..!!