உழவர் சந்தையில் காய்கறி விலை சரிவு

தர்மபுரி, ஜன.8: தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இதனால் காய்கறி செடிகளில் பூக்கள் உதிர்வு குறைந்து, விளைச்சல் அதிகரித்துள்ளது. இதையொட்டி காய்கறிகள் வரத்து அதிகரிப்பால், தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் 11ம் தேதி ஒரு கிலோ ₹32க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய், நேற்று உழவர் சந்தையில் ₹21க்கு விற்பனையானது. அதேபோல், ₹60க்கு விற்ற மொச்சை ₹50க்கும், ₹62க்கு விற்ற பெரிய வெங்காயம் ₹34க்கும், ₹60க்கு விற்பனையான சின்னவெங்காயம் நேற்று ₹40க்கும் விற்பனையானது. இதே போல், பல காய்கறிகளும் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு