வலங்கைமான்: வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உழவன் செயலியை விவசாயிகள் பதிவேற்றம் செய்து பயன்பெற வேளாண்மை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை பல்வேறு வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி.