Wednesday, July 3, 2024
Home » உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்

உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்

by kannappan

சென்னை:  பழங்குடி இன மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கடந்த 2016  அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலில் நடைபெற இருந்த நிலையில், அதை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தேர்தலுக்கான அறிவிப்பாணை முறையாக வெளியிடப்படவில்லை என்று கூறி அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். அதன்படி 2017 செப்டம்பர் 18க்குள் அறிவிப்பாணை வெளியிட நடவடிக்கை எடுக்காத மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி , இதர பகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது என்பதால் நீதிமன்ற அவமதிப்பு முடிவுக்கு வந்துள்ளது என்றார்.   தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் சிவ சண்முகம் ஆஜராகி, உள்ளாட்சி தேர்தலை முழுமையாக நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்….

You may also like

Leave a Comment

ten + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi