உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக கலந்தாய்வு கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஏனாத்தூர் சமுதாயக் கூடத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய செயலாளர்  பூபாலன் தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கழக வளர்ச்சி குறித்தும் ஆலோசனை வழங்கினார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் விருப்பு வெறுப்பு இன்றி அனைவரும் அயராது உழைக்க வேண்டும். தற்போது, தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து கிராம மக்களிடையே எடுத்துரைத்து, கொரோனா தடுப்பூசி அவசியத்தை  மக்களிடம் கூறி முதல்வர் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் தடுப்பூசி போட வலியுறுத்த வேண்டும் என கூறினார். கூட்டத்தில் எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் மற்றும் ஏனாத்தூர், பரந்தூர், கோவிந்தவாடி உள்பட 31 கிராமங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…