சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். நமக்கான காலம் நிச்சயம் வரும், அதுவரை கழக தொண்டர்கள் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும் என அவர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். …