Sunday, June 30, 2024
Home » உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி கட்டணம் செப். 1ம் தேதி முதல் உயர்வு

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி கட்டணம் செப். 1ம் தேதி முதல் உயர்வு

by kannappan

உளுந்தூர்பேட்டை:  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வருகிற 1ம் தேதி முதல் வாகனங்கள் செல்வதற்கான சுங்க கட்டணத்தை உயர்த்தி திருச்சி டோல்வே பிரைவேட் லிமிட்டெட் அறிவித்துள்ளது.  ஏற்கனவே கார், வேன், ஜீப் ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.55ஆக இருந்தது. தற்போது ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் பலமுறை  சென்று வருவதற்கு கட்டணம் ரூ.85ஆக இருந்தது. இந்த கட்டணம் தற்போது ரூ.15 உயர்த்தி ரூ.100ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கு ரூ.100ஆக இருந்தது, தற்போது ரூ.115 ஆக உயர்தப்பட்டுள்ளது. பலமுறை சென்று வருவதற்கு ரூ.150ல் இருந்து ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. டிராக் மற்றும் பஸ்களுக்கு ஒருமுறை செல்ல ரூ.200ல் இருந்து ரூ.230ஆகவும், பலமுறை செல்வதற்கு ரூ.300ல் இருந்து ரூ.345 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.320ல் இருந்து ரூ.370ஆகவும், பலமுறை செல்ல ரூ.480ல் இருந்து ரூ.550ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்….

You may also like

Leave a Comment

nine + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi