உலக மகளிர் தினவிழா: பெண் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்பு

திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள பெண் வழக்கறிஞர்கள், உதவியாளர்கள், ஆவண எழுத்தர்கள், முத்திரைத் தாள் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உலக மகளிர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், சங்க தலைவர் வழக்கறிஞர் ஹேமவாணி தலைமை தாங்கினார். ஆவண எழுத்தர் விஜிலா ராஜ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பெண் இன்ஸ்பெக்டர்கள் திருப்போரூர் லில்லி, மாமல்லபுரம் சத்தியபாமா ஆகியோர் கலந்து கொண்டு, பெண்களின் பாதுகாப்பு, போக்சோ சட்டம், பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசினர். முன்னதாக, திருப்போரூர் இன்ஸ்பெக்டர்கள்  லில்லி, மகளிர் தின சிறப்பு கேக் வெட்டி, பொதுமக்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் முத்திரைத்தாள் விற்பனையாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டார மகளிர் சுயஉதவி குழு சார்பில் வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் நேற்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மகளிர் குழுக்களின் தலைவர் வெண்பாக்கம் பூங்கொடி பழனி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, மகளிர் சுயஉதவி குழுவினர் மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து குழந்தைகளின் சிலம்பாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, 2 நிமிடத்தில் 70க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் செய்து காண்பித்த சிறுமிக்கு ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், பேரூராட்சி துணை தலைவர் சுரேஷ்குமார், திமுக நிர்வாகிகள் தியாகராஜன், விக்டர் செல்வகுமார், பழனி, ரவி, சஞ்சை காந்தி, சுகுமார், பாபு, சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

காஞ்சிபுரம் அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நூலகம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

பள்ளிப்பட்டு அருகே நள்ளிரவில் போதை ஆசாமி சிறுவனுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்