உலக பார்வை தினத்தை முன்னிட்டு 2 மணி நேரம் கண்ணை இமைக்காமல் சிறுமி சாதனை

ராஜபாளையம், அக். 14: உலக பார்வை தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் சிறுமி 2 மணிநேரம் கண் இமைக்காமல் சாதனை படைத்துள்ளார். ராஜபாளையத்தில் நகர்மன்ற தலைராக இருப்பவர் பவித்ரா ஷியாம். இவரது மகள் அனிஷ்கா (10). இவர், உலக சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கோடு கடந்த மூன்று மாதங்களாக பயிற்சியாளர் ஐயப்பன் மூலம் கண் இமைக்காமல் இருக்க பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

உலக பார்வை தினமான நேற்று முன்திரம் இரவு மாணவியின் சாதனை நிகழ்ச்சி நடந்தது. ராஜபாளையம் பெரிய சாவடியில் நடந்த நிகழ்ச்சியில், சிறுமி 2 மணி நேரம் கண்களை இமைக்காமல் சாதனை புரிந்தார். சிறுமியின் சாதனை ‘ஆசியன் புக் ஆப் ரெக்கார்டு’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. சாதனை படைத்த சிறுமியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை