உலக பார்வை தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்

தர்மபுரி: தர்மபுரி வாசன் கண் மருத்துவமனை மற்றும் கடகத்தூர் நற்சுவை நாட்டு சர்க்கரை சார்பில், நேற்று கடகத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மாணவர்களுக்கான இலவச கண் பரிசோதனை நடந்தது. முகாமில் கண்புரை கண்டறிதல், மாலை கண், மாறு கண், கண்ணீர் பை அடைப்பு, கிட்ட பார்வை, துரப்பார்வை, கண்ணில் சதை வளர்ச்சி, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவைக்கான பரிசோதனைகள் நடந்தது. இதில் கடகத்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நற்சுவை நாட்டு சர்க்கரை நிறுவனர் மற்றும் திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சுகுமார், கீதா சுகுமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை