உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி 46 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருள்

திருவள்ளூர், ஆக. 9: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளூர் ரோட்டரி சங்கம் சார்பாக உலக தாய்ப்பால் வாரம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு செயலாளர் கோபி அனைவரையும் வரவேற்றார். சுகாதார இயக்குனர் திலீபன் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் சக்சஸ் கார்த்திகேயன் தலைமை தாங்கி 46 பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினார். இதில் சங்கப் பணி முகிலன், போலியோ சேர்மன் எம்.ஆர்.எப்.பழனி, நேச்சுரல் அண்ணாமலை, அனந்தகிருஷ்ணன், மெய்ஞானசுந்தரம் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை