Saturday, September 28, 2024
Home » உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி கும்பகோணத்தி்ல் புதுக்கோட்டை உள்ளூரில் 500 மரக்கன்றுகள் நடவு

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி கும்பகோணத்தி்ல் புதுக்கோட்டை உள்ளூரில் 500 மரக்கன்றுகள் நடவு

by Karthik Yash

பட்டுக்கோட்டை, ஜூன் 6: முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 100வது பிறந்த நாள் நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டைஉள்ளூர் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு நாளை முன்னிட்டு தனி நபர்கள் பயன்பெறும் வகையில் பலன் தரக்கூடிய மரக்கன்றுகளை ஊராட்சி சார்பில், மக்களுக்கு பலன் தரக்கூடிய செம்மரம், மகாகனி, தேக்கு ஆகிய மூன்று வகையான 300 மரக்கன்றுகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேரில் சென்று நடவு செய்து கொடுக்கப்பட்டது. அதேபோல் ஊராட்சி குளக்கரை மற்றும் மயானக்கரைகளில் வேங்கை, பலா, நாவல், நீர் மருது, புங்கன், வேம்பு, வாகை, நெல்லி உள்ளிட்ட 15 வகையான 200 மரக்கன்றுகள் நடவு செய்து கொடுக்கப்பட்டது. ஊராட்சி சார்பில் ஊரா ட்சி மன்றத் தலைவர் ஜெயசுந்தரிவெங்கடாசலம் தலைமையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

You may also like

Leave a Comment

twelve + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi