உலக சகோதரத்துவ தின விழா

தஞ்சாவூர், செப். 26: மருதுபாண்டியர் கல்வி நிறுவனமும் தஞ்சை ராமகிருஷ்ணமடமும் இணைந்து உலக சகோதரத்துவ தின விழா கொண்டாடியது. இவ்விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மருதுபாண்டியன் தலைமை உரையாற்றினார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, மற்றும் மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தினர். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராயச்சி, மன உடல் மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறை அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் மாதங்கி பேசினார்.

தமிழ் உயராய்வுத்துறை உதவிப்பேராசிரியை கி. உஷா அறிமுக உரையாற்றினார். முன்னதாக துணை முதல்வர் ரா. தங்கராஜ் வரவேற்றார். முடிவில் தமிழ் உயராய்வுத்துறைத் தலைவர் வீ. வெற்றிவேல் நன்றி கூறினார். இவ்விழாவில் இளநிலை, முதுநிலை மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது