உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் உலக கை கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கிராம மக்கள் முன்னிலையில் சாப்பிடும் முன்பும் பின்பும் கைகள் நன்கு கழுவ வேண்டும், மலம் ஜலம் கழித்தபின் கைகளை கழுவுதல் அவசியம் மற்றும் கை கழுவும் முறை பற்றியும் தன் சுத்தம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் சுற்றுப்புறத் தூய்மை, பிளாஸ்டிக் தவிர்ப்பு, கட்டாயம் கழிவறை பயன்படுத்துவது, மழை நீர் சேகரிப்பு, டெங்கு தடுக்க முன்னெச்சரிக்கைகள் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. …