உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.08 கோடியை தாண்டியது: 44.17 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 210,823,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,417,088 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 188,753,767 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 17,652,682 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் 17,544,369 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 108,313 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்….

Related posts

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ரஷ்யர்களுக்கு அழைப்பு வேலை இடைவேளை நேரத்திலும் கணவன்-மனைவி ஒன்றாக இருங்கள் : அதிபர் புடின் அரசு அமர்க்கள அறிவிப்பு

நியூயார்க்கில் புகழ் பெற்ற இந்து கோயில் மீது தாக்குதல்

லெபனான், சிரியாவில் பெரும் பதற்றம் பேஜர்கள் வெடித்து 8 பேர் பலி: ஈரான் தூதர், 2750 பேர் படுகாயம்: ஹிஸ்புல்லா குழுவினரை குறி வைத்து தாக்குதல்; நவீன தொழில்நுட்பம் மூலம் இஸ்ரேல் நடத்தியதா?