டெல்லி: இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இத்தத்துவத்தின் அடிப்படை உண்மையை கொரோனா தொற்று பலருக்கு உணர்த்தியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் கொரோனாவுக்கு இணையாக தொற்று எதுவும் இல்லை. ஒரு நாடு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும் இது போன்ற ஒரு சவாலை தனியாக தீர்க்க முடியாது. கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான கோவின் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு வழங்க தயார். தடுப்பூசி வழங்குவதை திட்டமிடும் போது இந்தியாவில் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது எனவும் கூறினார். …