சென்னை: விருகம்பாக்கம் தொகுதி மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹13.85 லட்சம் மற்றும் 200 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதிக்கும் 9 தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவர் பறக்கும் படையினரை கண்டதும் வேகமாக செல்ல முயன்றார். உடனே பறக்கும் படையினர் பைக்கில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
…