காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் பகுதியில் பைக்கில், ஆவணங்கள் இன்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முனியாண்டி தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, திருமுக்கூடலில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வந்த நாகராஜன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆர்டிஓ ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனர்….