அந்தியூர், பிப்.28: ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற்றிட ஏற்கனவே பதிவு செய்தவர்கள், அரசு அறிவித்த தகுதி இருந்தும் கிடைக்கப்பெறாதவர்கள், விடுபட்டவர்களுக்கான விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடந்த இந்த சிறப்பு முகாமினை எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் ஆய்வு செய்தார்.
இதில் அத்தாணி பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவர் புனிதவள்ளி செந்தில்கணேஷ் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு மகளிரிடமிருந்து கலைஞர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பங்களையும் பெற்றார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகேஷ், பேரூராட்சி துணை தலைவர் லோகநாதன், மாவட்ட பிரதிநிதி சண்முகசுந்தரம், மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.