உயிரிழந்த பெண்ணுக்கு அதிமுகவில் கட்சிப்பதவி

மதுரை: அதிமுகவில் புதிய நிர்வாகிகளை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக நியமனம் செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியத்தில் அவைத்தலைவர், செயலாளர், இணை, துணை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஒன்றிய துணைச்செயலாளராக நியமிக்கப்பட்ட அன்னலட்சுமி கடந்த ஜன.31ம் தேதி உயிரிழந்து விட்டார். இதுதொடர்பான அஞ்சலி போஸ்டர்கள் ஒன்றியம் முழுவதும் ஒட்டப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் மதுரை மாவட்டத்தில் உள்ள உயர்மட்ட நிர்வாகிகளின் அலட்சியத்தால் இறந்த நபருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…