உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

ஓசூர்: ஓசூர் அருகே அத்திப்பள்ளி பகுதியில் பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்தைச் சேர்ந்த தலா ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் கோரிக்கை விடுத்தார். ஓசூர் அருகே பட்டாசு கடை தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். அத்திப்பள்ளியில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அரூர் சம்பத்குமார் எம்எல்கு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை