உப்பிடமங்கலம் பேரூராட்சியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

கிருஷ்ணராயபுரம், மார்ச் 22: கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் மகளிர் திட்டம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கோலங்கள் உறுதிமொழி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வாக்காளர்கள் வாக்களிப்பது நமது கடமை, அனைவரும் வாக்களிக்குமாறும், வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், நமது இலக்கு 100 சதவீதம் வாக்களிப்பது என அனைத்து வாக்காளர்களும் இதில் மகளிர் திட்டம் உதவி அலுவலர்கள். எஸ்.சிந்து, அன்பு ராஜா, கார்த்திகேயன், சுப்பிரமணியன், உப்பிடமங்கலம் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் சமுதாய அழைப்பாளர் பா.தீபா மேலும் ஏராளமான சுய உதவிக்குழு மகளிர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி