புதுச்சேரி : புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உப்பளம் துறைமுக மைதானத்தில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் அதிகம்பேர் மது அருந்துகின்றனர். இதுபற்றி போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து செல்லும்போது, அங்கு மது குடித்துக்கொண்டு இருப்பவர்கள், போலீசாரை கண்டதும், பின்புறத்தில் உள்ள வாய்க்கால் வழியாக இறங்கி தப்பி விடுகின்றனர். எனவே, அங்கு மது குடிப்பவர்களை பிடிக்கவும், அவர்களை தடுக்கவும் புதிய நடவடிக்ைக எடுத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார், மது குடிப்பவர்கள் தப்பித்துச் செல்லும் வாய்க்கால் பகுதியை ஆழப்படுத்தி, அங்கு செல்ல முடியாதபடி பொக்லைன் இயந்திரம் மூலம் முள்செடிகளை போட்டு அடைத்தனர்….