உபியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 3 பேர் பலி, 20 பேர் படுகாயம்

நொய்டா: உத்தரபிரதேசத்தில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக கிரேட்டர் நொய்டா காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு