உபரி நீர் திறப்பு அதிகரிப்பு கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: புழல் ஏரியில் இருந்து நேற்று மதியம் வினாடிக்கு 500 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆனது சுற்றி உள்ள கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன் புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாக செல்லும். எனவே கரையோரம் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்….

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்