Monday, July 8, 2024
Home » ‘உன் சேமிப்பை நாசம் செய்து விட்டேன், என்னை மன்னித்து விடு’ பெண் போலீசுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை: கோவை லாட்ஜில் தூக்கில் தொங்கினார்

‘உன் சேமிப்பை நாசம் செய்து விட்டேன், என்னை மன்னித்து விடு’ பெண் போலீசுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை: கோவை லாட்ஜில் தூக்கில் தொங்கினார்

by kannappan

கோவை: கோவையில் பெண் போலீசுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு, அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டார். திருவள்ளூர் மாவட்டம், கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் தரணி (43). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 30ம் தேதி கோவை வந்தார். காட்டூர் ராம் நகரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் அவரது அறையை சுத்தம் செய்வதற்காக ஊழியர் சென்று நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து லாட்ஜ் மேலாளர் மற்றும் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தரணி தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், தரணி தற்கொலை செய்யும் முன்பு மனைவிக்கு ஆடியோ அனுப்பியது தெரியவந்தது. தரணியின் மனைவி கிருபாவதி, திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு வாட்ஸ் அப்பில் தரணி அனுப்பியுள்ள ஆடியோவில், ‘‘என்னை மன்னித்து விடு. உன் நகைகளை விற்பனை செய்து செலவு செய்து விட்டேன். உனது சேமிப்பை நான் நாசம் செய்து விட்டேன். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நான் உங்களை விட்டு சாக போகிறேன்’’ என பேசியிருந்தார். இது குறித்து போலீசார் ெதாடர்ந்து விசாரிக்கின்றனர்….

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi