Wednesday, July 3, 2024
Home » உத்திராடம்

உத்திராடம்

by kannappan

உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழிக்கேற்ப ஊருக்கு அருகில் எப்போதும் சொத்து வாங்கும் யோகம் பலருக்கு உண்டு. கம்பீரப் பொலிவும், தெளிவும் மிகுந்து காணப்படும். சூரியனும், குருவும் இவ்வாறு இணையும்போது, ‘பெரிய மனுஷன்யா’ என்று காதுபடப் பேசுவார்கள். எப்போதுமே மூத்த சகோதர, சகோதரிகளை ஆதரிப்பார்கள். அரசாங்கத்தின் மிக ரகசியமான வேலைகளும், பதவிகளும் உங்களை தேடிவரும். உங்களில் பலருக்கு சி.ஐ.டி., சி.பி.ஐ., சீரூடை அணியாத (மப்டி போலீஸ்) காவல் அதிகாரி வேலை கிடைக்கும். எந்த மதத்தில் இருந்தாலும் அதன் சாராம்சத்தை புரிந்து கொள்வதில் வித்தகர்களாக விளங்குவீர்கள். தான் கற்றதை, கேட்டதை எல்லாவற்றையும் பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பீர்கள். மனதில்பட்டதை வெளிப்படையாகப் பேசுவார்கள். வெளிப்படையாக பேசுவதாலேயே எதிரிகள் தோன்றுவார்கள். அதையும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். எடுத்த உடனேயே சட்டென்று கோபப்படுதலோ, எடுத்தெறிந்து பேசுதலோ எதுவும் இருக்காது. ஒரு கட்டம் வரை பொறுத்துக் கொள்வீர்கள். உங்களை மீறினால் அமைதியாக தொடர்பை துண்டித்து விடுவீர்கள். எல்லாவிஷயத்திலும் நேர்த்தியை அதிகம் எதிர்பார்ப்பீர்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பதிலிருந்து தொடங்கி அலுவலகரீதியான அனைத்திலுமே நேர்த்தியை எதிர்பார்ப்பீர்கள். சூரியனுடைய மிதமிஞ்சிய பலம் உங்களிடத்தில் மிகுந்திருக்கும். லிங்கத்திலேயே மகாலிங்கம் என்றழைக்கப்படும் தலமான திருவிடைமருதூர் எனும் தலத்தை வழிபடுங்கள். லிங்கம் என்று ஈசனை அழைக்கப்படும் தலங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய தலமாக விளங்குவதே திருவிடைமருதூர். கோயிலும் பிரமாண்டமானது. லிங்கத்தின் அம்சமும் பிரமாண்டமானது. ஏனெனில் ஒரு கோயில் எனில் அதற்குள் பிள்ளையார் சந்நதி, முருகன் சந்நதி, பைரவர், சோமாஸ்கந்தர் என்றிருப்பதை பார்த்திருப்போம். ஆனால், இந்த மகாலிங்கம் எனும் இந்த சிவனுக்கு பிள்ளையாரே திருவலஞ்சுழி ஆகும். முருகன் சந்நதி சுவாமிமலை ஆகும். சோமாஸ்கந்தரே திருவாரூர் ஆகும். நடராஜராக கோனேரிராஜபுரம் விளங்குகிறது. பைரவராக சீர்காழியையும், ஷேத்ரபாலபுரத்தையும் சொல்வர். அப்போது மேலே சொன்ன இந்த கோயிலின் சக்தியின் மொத்தச் சுற்றளவும், பரப்பளவும் கிட்டத்தட்ட ஐம்பது கிலோமீட்டருக்குள் அடங்கும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது….

You may also like

Leave a Comment

eleven − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi