உதவி மேலாளர் பணி ஓய்வு நிறுத்தி வைப்பு

தர்மபுரி, ஆக.2: தர்மபுரி நகரின் மையப்பகுதியில் கூட்டுறவு நகர வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியில் உதவி மேலாளராக தர்மபுரியை சேர்ந்த கோவிந்தசாமி(60) பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தர்மபுரி சரக துணைப் பதிவாளர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். விசாரணை அலுவலராக கூட்டுறவு துறையை சேர்ந்த கவுரி என்பவர் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம், உதவி மேலாளர் கோவிந்தசாமி பணி ஓய்வுபெற இருந்தார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதாலும், விசாரணை அலுவலரால் தண்ட கட்டண நடவடிக்கை பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாலும், கூட்டுறவு வங்கி நிர்வாகம், அவரது பணி ஓய்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், அவர் வங்கி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது