உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவப்பு

நீலகிரி: உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்பாதையில் விழுந்துள்ள பாறை, மண்குவியலை அகற்றும் பணி தொடர்வதால் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டங்களில் கடந்த 13ம் தேதி பெருத்த கனமழையால் கல்லாறு- ஹில்குரோவ் இடையே மலை ரயில் பாதையில் 10க்கு, மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மழையின் காரணமாக தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதன் காரணமாக 16ம் தேதி வரை மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும் ரயில் பாதையில் விழுந்துள்ள பாறை மற்றும் மண்குவியலை அகற்றும் பணி தொடர்வதால் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு