உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் உடல்கள் மீட்பு..!!

நீலகிரி: உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பெண் பக்தர்களில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. சீகூர் வனப்பகுதியில் ஆனிக்கல் மாரியம்மன் கோயிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. கோயில் தீப திருவிழாவில் பங்கேற்க வந்த பக்தர்கள் ஆற்றை கடக்க முற்பட்டபோது, திடீரென காட்டாற்று வெள்ளம் வந்தது. ஜெக்கலொரை கிராமத்தைச் சேர்ந்த சரோஜா (65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 பேரில் 2 பேர் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்….

Related posts

கடலில் மூழ்கி மாயமான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

மருத்துவமனையை பராமரிக்காத டாக்டர் மாற்றம் அமைச்சர் அதிரடி

கோவை கார் வெடிப்பு வழக்கு 4 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்