உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக தரப்பில் கால அவகாசம் கேட்ட்க்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக தரப்பில் கால அவகாசம் கேட்ட்க்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. உட்கட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் கூறியுள்ளது. உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த தடைவிதிக்க  கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவில் சட்டமன்ற தேர்தலுக்குள் அஙகீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தலை நடத்தக் கோரியும், உட்கட்சி தேர்தலை நடத்தும் வரை தமிழகத்தில் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்பதையும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் உட்கட்சி தேர்தல் நடத்தாததால் பல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் பொறுப்புகள் பெற முடியாமல் நிர்வாகிகள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்குள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் உட்கட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற  தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முட்டியது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை