உடையார்பாளையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு

ஜெயங்கொண்டம்,நவ.29: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி கிராமம் தா.பழூர்-விளாங்குடி சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை சேதமடைவதாக கூறி கோரைக்குழி கிராமத்தை சேர்ந்த கோபால், சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த நக்கீரன்(45), ராஜேந்திரன், கண்ணன், சக்திவேல் 5 பேர் மற்றும் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சுத்தமல்லி விஏஓ பிரபாகரன் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் எஸ்ஐ திருவேங்கடம் 5 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்