உடல் உறுப்பு தானம் செய்த வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை

மல்லசமுத்திரம், ஜன.23: மல்லசமுத்திரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மல்லசமுத்திரம் அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் மூலப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் பிரதீப்குமார்(24). டிராக்டர் டிரைவரான இவர், கடந்த 16ம் தேதி இரவு வேலகவுண்டம்பட்டி அருகே எல்லப்பாளையத்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, அவரது உடலை தானம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து, உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இதையடுத்து, பிரதீப்குமாரின் சொந்த ஊரான மூலப்பாளையம் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடந்தது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,சுகந்தி, ஆர்.ஐ., அனுராதா முன்னிலையில், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்