மதுரை, ஜூலை 7: உசிலம்பட்டி கூட்டுறவு விற்பனை சங்கம், உசிலம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் திருமங்கலம் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகியவற்றில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர் ந.சுப்பையன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார் அப்போது, சங்கம் முன்னேற்றம் அடைய பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். அவருடன் மதுரை மாவட்ட கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.