உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட 938 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது

சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 938 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1594 மனுக்கள் காவல்துறையில் பெறப்பட்டன. நீதிமன்றம் தொடர்புடைய மனுக்கள் தொடர்பாக 244 புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 1350 மனுக்களில், நேற்று முன்தினம் வரை 938 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட மனுக்களில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக 291 மனுக்களும், சொத்து தகராறு தொடர்பாக 278 மனுக்களும், சட்ட விரோத நடவடிக்கை கட்டுப்படுத்தக் கோரி 70 மனுக்களும், காவல் நிலைய சேவைகள் வேண்டி 51 மனுக்களும், குடும்பத் தகராறு தொடர்பாக 58 மனுக்களும், இதர காரணங்களுக்காக 190 மனுக்களும் அடங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி