Monday, July 1, 2024
Home » உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட 938 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட 938 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது

by kannappan

சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 938 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1594 மனுக்கள் காவல்துறையில் பெறப்பட்டன. நீதிமன்றம் தொடர்புடைய மனுக்கள் தொடர்பாக 244 புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 1350 மனுக்களில், நேற்று முன்தினம் வரை 938 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட மனுக்களில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக 291 மனுக்களும், சொத்து தகராறு தொடர்பாக 278 மனுக்களும், சட்ட விரோத நடவடிக்கை கட்டுப்படுத்தக் கோரி 70 மனுக்களும், காவல் நிலைய சேவைகள் வேண்டி 51 மனுக்களும், குடும்பத் தகராறு தொடர்பாக 58 மனுக்களும், இதர காரணங்களுக்காக 190 மனுக்களும் அடங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eight + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi