உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு: மா.சுப்பிரமணியனுக்கு மக்கள் ஆதரவு

சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 172வது வார்டில் உள்ள மேற்கு கால்வரை கரை சாலை, ஏரிக்கரை தெரு, கோட்டூர் மார்க்கெட், கோட்டூர் கார்டன் 1, 2, 3வது தெருக்கள், தண்டபாணி 1, 2வது தெருக்கள், அம்பாடி தெரு, அருணாசலம் சாலை, வள்ளியம்மை சாலை, ரஞ்சித்ரோடு, அண்ணா பல்லைக்கழகம் குடியிருப்பு வரை அனைத்து தெருக்களிலும் திறந்தவெளி ஆட்டோ மூலம் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி  மேம்பாட்டு நிதியிலிருந்து 172வது வார்டுக்கு ரூ.135 லட்சத்தில் பல்வேறு பணிகளை செய்துள்ளேன். தொடர்ந்து வளர்சி திட்ட பணிகளை மேற்கொள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்,’ என்றார். அப்போது பொதுமக்கள் உங்களுக்கு தான் எங்கள் வாக்கு. நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். இந்தாங்க இப்போதைக்கு கூழ்குடித்து கூலாக இருங்கள், நீங்கள் சைதையின் வளர்ச்சி நாயகன் என்று உற்சாக வரவேற்று வாக்குறுதி அளித்தனர். தொடர்ந்து, மாலையில் 171அ வட்டத்தில் ரயில்வே பார்டர் சாலை, காந்தி தெரு அண்ணா தெரு, பாரதியார் தெரு, மருத்துவமனை சாலை, சுப்புபிள்ளை தோட்டம், உள்ள அனைத்துத் தெருக்களிலும் திறந்தவெளி ஆட்டோ மூலம் வீதி, வீதியாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். திமுக பகுதி கழக செயலாளர் இரா.துரைராஜ் ராஜா, சைதை. மா.அன்பரசன், சைதை சம்பத், விசிக ஜேக்கப், மதிமுக சுப்பிரமணி, செல்வக்குமார், வெங்கடேசன், எஸ்.ராதாகிருஷ்ணன், என்.நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

Related posts

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு இனிமேல் ஒன்றுமில்லை: எடப்பாடி பேட்டி

ஈடி, ஐடியை அண்ணாமலை ஏவிவிட வேண்டும் எடப்பாடி சிறை சென்றால்தான் அதிமுக ஒருங்கிணையும்: புகழேந்தி ஆவேசம்

யார் துரோகி? எடப்பாடியை சுற்றிவளைத்து தாக்கும் அண்ணாமலை, ஓபிஎஸ்: பதிலடி கொடுக்கும் அதிமுக நிர்வாகிகள்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு