கோத்தகிரி: கோத்தகிரி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஈளடா தடுப்பணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈளடா, கதகட்டி, கெரடாமட்டம், கைக்காட்டி, ஓம்நகர், வார்விக், புதூர், கேர்ப்பட்ட போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஈளடா தடுப்பணை விளங்குகிறது. இங்குள்ள கிராமப்புற பகுதிகளில் அதிகளவு விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்திற்கும் இந்த நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
…