ஈரோட்டில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

 

ஈரோடு, டிச.25: ஈரோட்டில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு திமுக பகுதி செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அடங்கிய பெட்டியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை