ஈரோட்டில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் திடீர் மாற்றம்

ஈரோடு, செப்.5: ஈரோட்டில் கைத்தறித்துறை உதவி இயக்குநரை திடீரென மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கைத்தறித்துறை உதவி இயக்குநராக இருந்து வந்தவர் சரவணன். இவர் நேற்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு கரூர் கைத்தறிதுறை உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்குமார் டெக்ஸ் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்த தமிழ்செல்வன், ஈரோடு கைத்தறி உதவி இயக்குநராகவும், கரூரில் கைத்தறி உதவி இயக்குநராக பணியாற்றி வந்த வெற்றிவேலை, சென்குமார் டெக்ஸ் மேலாண் இயக்குநராகவும் நியமித்து தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை