Saturday, October 5, 2024
Home » ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியிடம் டிஐஜி கிடுக்கிப்பிடி விசாரணை

ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியிடம் டிஐஜி கிடுக்கிப்பிடி விசாரணை

by kannappan

ஈரோடு: ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியிடம் ரகசிய இடத்தில் வைத்து சரக டிஐஜி முத்துசாமி தீவிர விசாரணை நடத்தினார். ஈரோட்டைச் சேர்ந்த நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முசாப்தீன் (28). இவரை கடந்த 26ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து ஈரோடு வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து இவர் மீது 10 பிரிவுகளின் கீழ் ஈரோடு வடக்கு போலீசார் வழக்குபதிந்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆசிப் முசாப்தீனை நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், காவலில் எடுத்து கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய விசாரணை விடிய விடிய நடந்தது. கோவை சரக டிஐஜி முத்துசாமி மற்றும் போலீசார் ஏற்கனவே கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு துருவித்துருவி விசாரணையை நடத்தினர். குறிப்பாக, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தது எப்போது?, யார் மூலம் உறுப்பினராக சேர்ந்தார்? யாரெல்லாம் உள்ளனர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்தது. …

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi