ஈரோடு: ஈரோட்டில் சாலையில் டயரை கொளுத்தி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பிஎப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் பிஎப்ஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். …