Thursday, September 19, 2024
Home » ஈரோட்டில் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி

ஈரோட்டில் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி

by Ranjith

 

ஈரோடு, ஆக. 12: ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் சாலையில் உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் இலவச கோழி வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது வரும் 19ம் தேதி முதல் துவங்கி 30ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பயிற்சியின்போது சீருடை, உணவு இலவசமாக அளிக்கப்பட்டு, பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போர், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0424 2400338, 87783 23213, 72006 50604 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi