ஈரோடு மைலம்பாடியில் ரூ.5 லட்சத்துக்கு எள் விற்பனை

 

ஈரோடு,அக்.7: மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 5 லட்சத்துக்கு எள் விற்பனையானது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 52 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.115.69க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 156.50க்கும், சராசரி விலையாக ரூ. 136.10க்கும் விற்பனையானது.

வெள்ளை ரக எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.102.19க்கும், அதிகபட்ச விலையாக ரூ.144.79க்கும், சராசரி விலையாக ரூ. 123.49க்கும் விற்பனையானது. சிவப்பு ரக எள் விற்பனைக்கு வரவில்லை. இந்த ஏலத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 831 கிலோ எடையிலான எள் ரூ. 5 லட்சத்து 18 ஆயிரத்து 274க்கு விற்பனையானதாக விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்