ஈரோடு மாவட்டம் துவரை சாகுபடி சிறப்பு மண்டலமாக அறிவிப்பு

ஈரோடு, ஜூன் 26: வேளாண் துறை மூலம் துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும் ஈரோடு மாவட்டம் துவரை சாகுபடி சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 250 எக்டேர் செயல் விளக்க திடல் அமைக்க, ரூ.22.5 லட்சம் நிதியானது விவசாயிகளுக்கு மானியமாக வழங்கிட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

ஒரு விவசாயி அதிகபட்சம், 2 எக்டேர் துவரை செயல் விளக்கத்திட்ட அமைக்கலாம். எக்டேருக்கு ரூ.9,000 மானியமாக வழங்கப்படும். துவரை விதைகள், பயறு வகை நுண்ணூட்டம், உயிர் உரங்கள், 50 சதவீத மானியத்தில் வேளாண் விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். பின்னேற்பு மானியமாக ரூ.8,050 விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்படும். விவசாயிகள், துவரை விதைகளை 5க்கு, 3 என்ற அளவில் பாலித்தீன் பைகளில் துவரை நாற்றங்கால் தயார் செய்து, 1 எக்டேர் பரப்பில் நடவு மேற்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி