ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் ஒருவர் உயிரிழந்தார். ரசாயன ஆலையில் வெளியேறிய விஷவாயு தாக்கியதில் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ரசாயன வாயு கசிவுற்றதால் அதை சுவாசித்த, நடுப்பாளையத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் உயிரிழந்தார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 13 பேர், சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். …