Wednesday, July 3, 2024
Home » ஈரோடு மாவட்டத்தில் 217 பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி-தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கல்

ஈரோடு மாவட்டத்தில் 217 பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி-தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கல்

by kannappan

ஈரோடு : தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், செய்முறை தேர்வு மட்டும் திட்டமிட்டபடி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடித்து நடத்தப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் மற்றும் தற்காலிக மதிப்பெண் பட்டியல் நேற்று வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பிளஸ் 2 படித்து வந்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கப்பட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் நேற்று ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டது. அந்த மதிப்பெண் பட்டியலில், 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 10ம் வகுப்பில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் சாரசரி மதிப்பெண் 50 சதவீதமும், பிளஸ் 1 வகுப்பில் எழுத்து தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்ணில் 20 சதவீதமும், பிளஸ் 2 அகமதிப்பீட்டில் பெற்ற 30 சதவீதம் என மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 98 அரசு மேல்நிலைப்பள்ளி, 6 நகராட்சி மேல்நிலைப்பள்ளி, 12 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 2 ஆதிதிராவிட நல பள்ளிகள், 82 மெட்ரிக் பள்ளிகள், 17 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 217 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 11,278 மாணவிகள், 12,612 மாணவிகள் என மொத்தம் 23,890 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 96.99 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலர் அவர்கள் படித்த பள்ளிகளுக்கு வந்து இணையதளத்தில் ஆசிரியர்களின் உதவியுடன் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்று சென்றனர். சிலர் இ-சேவை மையம், கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலை மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொண்டனர். பிளஸ் 2 மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களது மதிப்பெண் பட்டியலை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரோடு மாவட்டத்தில் 217 பள்ளிகளில் பிளஸ் 2 படித்த அனைத்து மாணவ-மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் அந்தந்த பள்ளியில் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலில் அவர்களது பெயர், பிறந்த தேதி, வருடம், மாதம் போன்றவற்றில் பிழை இருந்தால் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியிடம் தெரிவித்து, முறையாக விண்ணப்பித்து அந்த பிழைகளை அசல் சான்றிதழில் திருத்தம் செய்து கொள்ளலாம்’’ என்றார்….

You may also like

Leave a Comment

eight − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi