ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேசனாக மலையம்பாளையம் தேர்வு

 

ஈரோடு,ஜூலை26: ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேசனாக மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  போலீஸ் ஸ்டேசன் துாய்மை, வழக்குகளை சிறப்பாக கையாளுதல், பதிவேடுகள் பராமரிப்பு, குற்ற செயல்களை குறைத்தல், குற்றவாளிகள் கைது நடவடிக்கை, சார்ஜ் ஷீட் தயார் செய்து சமர்பித்தல் சட்டம் ஒழுங்கு சிறப்பாக கையாளுதல் உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு சிறந்து போலீஸ் ஸ்டேஷனுக்கான பரிசு வழங்கப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டில் சிறந்த போலீஸ் ஸ்டேசனுக்கான ஆய்வு நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்கள் சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான தகுதி போட்டியில் பங்கேற்றன. இறுதியில் பெருந்துறை சப்டிவிசன் மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேசன் சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கான பரிசை பெற்றது. இந்த பரிசை சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு டி.ஜி.பி. சங்கர்ஜிவால் வழங்கினார். இதனை போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தன் பெற்று கொண்டார். நேற்று ஈரோடு எஸ்.பி. ஜவகரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்